வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்  - என்.ஆர்.நாராயண மூர்த்தி 

வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் தங்கும் காலத்தை பழையபடி 182 நாட்களாக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி வலியுறுத்தியுள்ளார். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் தேஷ்பாண்டே அறக்கட்டளை சார்பில் 14-வது மேம்பாட்டு பேச்சுவார்த்தை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி பேசுகையில், கடந்த 2019 - 2020-ம் ஆண்டுவரை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), ஓராண்டில் இந்தியாவில் தங்கும் காலம் 182 நாட்களாக இருந்தது. ஆனால், 2020-ம் ஆண்டு நிதிச் சட்டத்தின் கீழ் என்ஆர்ஐ […]

வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் தங்கும் காலத்தை பழையபடி 182 நாட்களாக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் தேஷ்பாண்டே அறக்கட்டளை சார்பில் 14-வது மேம்பாட்டு பேச்சுவார்த்தை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி பேசுகையில், கடந்த 2019 - 2020-ம் ஆண்டுவரை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), ஓராண்டில் இந்தியாவில் தங்கும் காலம் 182 நாட்களாக இருந்தது. ஆனால், 2020-ம் ஆண்டு நிதிச் சட்டத்தின் கீழ் என்ஆர்ஐ தங்கும் காலம் 120 நாட்களாக குறைக்கப்பட்டது.

எனவே, பழையபடி என்ஆர்ஐ 182 நாட்கள் இந்தியாவில் தங்குவதற்கான நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுக்க வேண்டும். இந்த காலத்தை 250 நாட்களாக உயர்த்தினாலும் எந்த தவறும் இல்லை. என்ஆர்ஐ தங்கும் நாட்களை குறைத்ததால் இந்தியாவுக்கு எந்த கூடுதல் வருவாயும் கிடைக்காது. மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் என்ஆர்ஐ 3 கோடிக்கும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu