விண்வெளி ஆராய்ச்சி மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டத்தை இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் அடுத்த திட்டத்தை இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் 2 முதல் 3 இந்திய விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவினை சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பி மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனைக்காக விமானப்படையை சேர்ந்த 4 விமான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். 2045ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை முழுவீச்சுடன் செய்து முடிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் தொடங்குவது மற்றும் உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் இருப்பை மேலும் உறுதி படுத்துவது, வெள்ளி கோளின் சுற்றுவட்ட பாதை ஆய்வு திட்டம் மற்றும் செவ்வாயில் ஆராய்ச்சி ஆகிய கிரகங்களுக்கு இடையேயான ஆராய்ச்சியை மேற்கொள்வது போன்ற லட்சியங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டங்களின் மூலம் இந்தியா புதிய உயரங்களை எட்ட தயாராக உள்ளது.