சென்னையில் நடைபெற உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்கு ஜனாதிபதி அழைக்கப்பட்டார். இதில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். இவரை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர் என் ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.