தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பொருள்களின் விலை மீண்டும் உயர்ந்து உள்ளது.
தமிழக அரசின் ஆவின் நிறுவனமானது பால், நெய், தயிர் பாதாம் பவுடர், குல்பி, பால் பவுடர், ஐஸ்கிரீம், பன்னீர் போன்ற பொருட்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது.
இந்நிலையில் இன்று முதல் ஆவின் பொருள்களின் விலை 20 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ஒரு கிலோ பன்னீர் ரூ. 450 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 550 ஆக உயர்ந்துள்ளது.