கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டுள்ள சுவாமி ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டுள்ள சுவாமி ராமானுஜர் சிலையை வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஆன்மிகவாதிகள் விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள ராமாயண கண்காட்சிக் கூடம், வெங்கடாஜலபதி கோயிலுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் ராமானுஜரையும் வழிபட்டு செல்லும் வகையில் அவரது சிலை அங்கு திறக்கப்பட உள்ளது. விவேகானந்தா கேந்திராவில் ராமாயண கண்காட்சிக் கூடம், வெங்கடாஜலபதி கோயில் ஆகியவையும் உள்ளன.