போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

October 5, 2023

சென்னையில் கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் சங்கம், பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த மூன்று சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபட்டதால் அங்கு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதில் சம வேலைக்கு சம ஊதியம், முழுநேர ஆசிரியர் பணி நிரந்தரம ஆகிய கோரிக்கைகளை […]

சென்னையில் கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் சங்கம், பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த மூன்று சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபட்டதால் அங்கு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதில் சம வேலைக்கு சம ஊதியம், முழுநேர ஆசிரியர் பணி நிரந்தரம ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆசிரியருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசிரியர்கள் பேச்சு வார்த்தைக்கு உடன்பட மறுத்து வந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பும் படி அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். போராட்டம் தீவிரமானது தொடர்ந்து போலீஸ் அவர்கள் ஆசிரியர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதில் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 500 பேர் பெண்கள் ஆவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu