அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடந்தது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. செனட் சபையில் 35 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அவற்றில் 21 இடங்கள் எதிர்க்கட்சியான டிரம்பின் குடியரசு கட்சிக்கும், 14 இடங்கள் ஜோ பைடனின் ஜனநாயக கட்சிக்கும் கிடைத்தது.
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தலா 48 இடங்களுடன் சம நிலையில் உள்ளன. 4 இடங்களுக்கு முடிவு வரவேண்டி உள்ளது. நெவேடா, ஜார்ஜியா, விஸ்கான்சின், அரிசோனா ஆகிய 4 மாகாணங்களில் இருந்து வருகிற முடிவுதான் செனட் சபை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை நிர்ணயிக்கும்.