ரயில்வே ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு முடிவு

November 16, 2023

மத்திய அரசு ஊழியர்கள் ரயில்வே ஊழியர்களிடம் வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னக ரயில்வே சார்பில் பொது மஹாசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளராக என்.கண்ணையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் தற்போது பாமர மக்கள் பயணிக்கும் பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதுகாக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு புதிய […]

மத்திய அரசு ஊழியர்கள் ரயில்வே ஊழியர்களிடம் வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னக ரயில்வே சார்பில் பொது மஹாசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளராக என்.கண்ணையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் தற்போது பாமர மக்கள் பயணிக்கும் பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதுகாக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தேசிய பென்ஷன் திட்டம் என்று மாற்றப்பட்டாலும் பயனின்றி உள்ளது. மேலும் தற்போது ஆட்குறைப்பு, தனியார் மயமாக்கல் போன்ற காரணங்களினால் பணியிடங்களில் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ரயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் இடங்களுக்கு 2.80 கோடி பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இதனால் வேலையில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இது போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக அகில இந்திய அளவில் வருகின்ற 21,22ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu