எகிப்தில் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் மாநாட்டில், ஆக்ஸ்பேம் என்ற அமைப்பு, “கார்பன் பில்லியனர்கள்: உலகப் பணக்காரர்களின் முதலீட்டு உமிழ்வுகள்” என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலகில் உள்ள பணக்காரர்களில், குறிப்பிட்ட 125 கோடீஸ்வரர்களால் மட்டுமே வருடத்திற்கு 39 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குறிப்பிட்ட இந்த 125 கோடீஸ்வரர்களின் நிறுவனங்கள், மற்றும் அவர்கள் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், ஆகியவற்றின் மூலம், ஆண்டுக்கு 392 மில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது. இது பிரான்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் 2050க்குள் 1.6 பில்லியன் ஹெக்டேர் அளவு காடுகளை உருவாக்கினால், கார்பன் உமிழ்வை சமன் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கார்பன் உமிழ்வு அதிகமாக உள்ள நிறுவனத்திடம், கூடுதல் வரி வசூல் செய்து, அதனை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.