டிசம்பர் 2021 முதல் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திவிட்டதாகவும், தற்போது ம௫ந்துகள் கையிருப்பில் இல்லை என்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.
வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் வலையமைப்பின் (DCVMN) வருடாந்திர கூட்டம் புனேவில் தொடங்கியது. அப்போது இது குறித்து ௯றிய பூனவல்லா, இந்த ம௫ந்து பயன்பாட்டு காலத்தில் பலகோடி டோஸ்களை நிறுவனம் தயாரித்தது. ஆனால் மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் 100 மில்லியன் டோஸ்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே நிறுவனம் டிசம்பர் 2021 முதல் கோவிஷீல்ட் உற்பத்தியை நிறுத்திவிட்டதாகக் ௯றினார்.
அதே சமயம் SII தடுப்பூசிகளின் கலவையான ம௫ந்துகளை அறிமுகப்படுத்த அனுமதிக்கப்படுகிறது என்றார். இந்த கலவை மருந்து தடுப்பூசியான Covovax தயாரிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி கிடைத்தால் இந்திய கட்டுப்பாட்டாளரும் அனுமதி கொடுக்க வாய்ப்புள்ளதாகக் ௯றினார். எவ்வாறாயினும் Covovax க்கு அடுத்த இரண்டு வாரங்களில் அனுமதி கிடைக்கும் என்று பூனவல்லா கூறினார். இருப்பினும் மக்கள் தற்போது, முன்னெச்சரிக்கை மருந்துகளில் அலட்சியமாக இ௫ப்பதால் இந்த ம௫ந்திற்கு அவசரத் தேவை எதுவும் இல்லை என்று ௯றினார்.