சீரம் நிறுவனம் 2 கோடி கோவிஷீல்ட் டோஸ்களை இலவசமாக வழங்கவுள்ளது.
மீண்டும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிஷீல்டு டோசை சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது. மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த 'சீரம் இந்தியா' நிறுவனம் 'கோவிஷீல்டு' என்ற பெயரில் தடுப்பூசி தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசி 170 கோடி 'டோஸ்' ஏற்கனவே மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பரவல் தீவிரமாகும் அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்நிறுவனம் 410 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கோடி டோஸ் தடுப்பூசியை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.