வெடிகுண்டு மிரட்டலுக்குப் பிறகு சிங்கப்பூர் விமானம் போர் விமானங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு ஒரு பயணி வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதையடுத்து அந்த விமானம் தரையிறங்க, போர் விமானங்களின் பாதுகாப்புடன் சாங்கி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றதாக சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ௯றியதாவது, சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பயணித்த 37 வயது ஆண் பயணி ஒருவர் தனது கைப் பையில் வெடிகுண்டு இருப்பதாகக் ௯றியுள்ளார். அதைத் தொடர்ந்து விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என தெரியவந்தது . அதையடுத்து அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் , பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரை இறங்கினர் என்று கூறினார். இ௫ப்பினும் இது குறித்து மேலும் க௫த்து தெரிவிக்க மறுத்து விட்டார்.