புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கியது.
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பழைய கட்டிடத்தில் இடம் நெருக்கடி ஏற்பட்டதால் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இது கடந்த மே மாதம் திறக்கப்பட்டாலும் அதிகாரப்பூர்வமான பணிகள் இன்று தான் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி எம்.பி.கள் மற்றும் அமைச்சர்கள் புதிய பாராளுமன்றத்திற்கு இடமாற்றம் செய்தனர். அங்கு பிரதமர் மோடி அரசியலமைப்புச் சட்டப் புத்தக நகலை ஏந்தியபடி முன் செல்ல எம்.பிகள் அனைவரும் தொடர்ந்து சென்றனர். இனி பாராளுமன்றத்தின் அனைத்து பணிகளும் முறைப்படி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும். இந்த புதிய கட்டிடம் 12000 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 600 சதுரஅடி அளவில் மூன்று நுழைவு வாயில்களுடன் கட்டப்பட்டுள்ளது.