ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கென்யாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது

September 5, 2022

​ கென்யாவில் முந்தைய தேர்தல் தொடர்பான வன்முறைகளால் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவை நிறுத்திவைப்பதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் திங்களன்று முடிவு செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில், அதிபர் உஹுரு கென்யாட்டாவின் வெற்றியை ஒடிங்கா மீதான முறைகேடுகள் காரணமாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா, ஐந்தாவதுமுறையாக ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்கிறார். இந்நிலையில் அவர் துணை […]


கென்யாவில் முந்தைய தேர்தல் தொடர்பான வன்முறைகளால் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவை நிறுத்திவைப்பதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் திங்களன்று முடிவு செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில், அதிபர் உஹுரு கென்யாட்டாவின் வெற்றியை ஒடிங்கா மீதான முறைகேடுகள் காரணமாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா, ஐந்தாவதுமுறையாக ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்கிறார். இந்நிலையில் அவர் துணை ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் வெற்றியை மோசடியின் விளைவு என்று கூறுகிறார். அச்சமயம் நடந்த தேர்தல் தொடர்பான மோதல்களில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஏழு தேர்தல் ஆணையர்களில் நான்கு பேர், தேர்தல் ஆணையத்தின் முடிவை மறுத்துவ௫கின்றனர். அதாவது
இத்தேர்தலில் கென்யாட்டாவுக்கு ஆதரவளித்த ஒடிங்கா, ரூட்டோவுக்காக பணிபுரியும் குழுவின் அமைப்பை ஹேக் செய்து, வாக்கு படிவங்களின் உண்மையான படங்களை போலியாக மாற்றியதாகவும், ரூட்டோவின் வாக்கு மதிப்பை அதிகரித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.அத்துடன் மனுதாரர் சமர்ப்பித்துள்ள சான்றுகள் அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்ட மோசடித் திட்டம் எனக் காட்டுகிறது என்று ஒடிங்காவின் வழக்கறிஞர் பிலிப் முர்கோர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் ருடோவின் சட்டக் குழு ஒடிங்காவின் கூற்றுக்களை ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டு என்று நிராகரித்தது. பின்னர் நீதிமன்றத்தால் முடிவு ரத்து செய்யப்பட்டால், 60 நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 2007 தேர்தலுக்குப் பிறகு நடந்த மோதல்களில் 1,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது அதிபர் மவாய் கிபாகியின் கட்சி பாரிய மோசடியில் ஈடுபட்டதாக ஒடிங்கா குற்றம் சாட்டினார்.

 

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu