முந்த்ரா துறைமுகத்திற்கு அருகே உள்ள சுமார் 30 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அதானி போர்ட்ஸ்-க்கு அனுமதி அளித்து குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
முந்த்ரா துறைமுகத்திற்கு அருகில் உள்ள சுமார் 30 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அதானி துறைமுகத்திற்கு குஜராத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. மேலும் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். அத்துடன் வெவ்வேறு நீதிமன்றங்களில் முரண்பாடான சட்ட நிலைப்பாடுகள் எடுப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை அரசாங்கம் உருவாக்குமாறும் அட்டர்னி ஜெனரலுக்கு நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.