தமிழக அரசு ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ ரூ.1.50 கோடி ஒதுக்கியது

December 26, 2024

தமிழ்நாடு அரசு ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை நிறுவ ரூ.1.50 கோடி ஒதுக்கியது. தமிழ்நாடு அரசு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை நிறுவுவதற்காக 3,44,41,750 ரூபாய்கள் வழங்கியுள்ளது. 1927-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டுக்கான இந்த முயற்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் தன் வாழ்த்துச் செய்தியில், "தமிழின் தொன்மையும் செறிவும், வளமும் நம் அனைவரையும் பெருமிதம் கொள்ளச் செய்யும்," […]

தமிழ்நாடு அரசு ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை நிறுவ ரூ.1.50 கோடி ஒதுக்கியது.

தமிழ்நாடு அரசு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை நிறுவுவதற்காக 3,44,41,750 ரூபாய்கள் வழங்கியுள்ளது. 1927-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டுக்கான இந்த முயற்சி நடைபெறுகிறது.

தமிழ்நாடு முதல்வர் தன் வாழ்த்துச் செய்தியில், "தமிழின் தொன்மையும் செறிவும், வளமும் நம் அனைவரையும் பெருமிதம் கொள்ளச் செய்யும்," என்று கூறினார். 12.12.24 அன்று ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பில் நடந்த விழாவில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை உடன் இருந்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu