நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுதும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. மாலை வரை நடந்த இந்த போராட்டத்தை பழரசம் கொடுத்து திராவிட கழக தலைவர் கி வீரமணி முடித்து வைத்தார். நீட் தேர்வை எதிர்த்து நடைபெறும் போராட்டம் தொடர்பாக மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கோரிக்கை அல்ல. அது கல்வி கோரிக்கை. சமூக சமத்துவ கல்வியை விரும்புபவர்களின் கோரிக்கை ஆகும். இது மக்களின் கோரிக்கையாக உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நீட் தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது என்று நான் உறுதி அளிக்கிறேன். நீர் தடுப்புச்சுவர் உடைபடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.