டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 19%-ல் இருந்து 20%-ஆக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
தற்போது டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் நெல் ஈரப்பதம் அதிகரித்ததால் 19%-ல் இருந்து 22%-ஆக உயர்த்தி தரவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ஒன்றிய குழு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்விற்கு பிறகு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கொள்முதல் ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டது.