உலகின் வரலாற்றிலேயே 2025 ஜனவரி மாதம் மிக அதிக வெப்பநிலை கொண்டதாக இருந்ததாக ஐரோப்பிய வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஜனவரி மாதத்தில் உலக வெப்பநிலை, லா நினோ போன்ற வளிமண்டலப் போக்கு நிலவும் இருந்தபோதிலும், இதுவரை எந்த ஜனவரி மாதத்திலும் பதிவாகாத அளவிற்கு உயர்ந்துள்ளது’ என்று கூறியுள்ளது.
2024 ஆம் ஆண்டு உலகின் மிக அதிக வெப்பம் கொண்ட ஆண்டாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 2025 ஜனவரி மாதமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலை கொண்டதாக அமைந்துள்ளது. இந்நிலையில், உலகளாவிய அளவில் பருவநிலை மாற்றம் கடுமையாக பாதிக்கத் தொடங்கியுள்ளது என்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையைக் குறிப்பிடுவதாக வானிலை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.