மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாததால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து குறைய தொடங்கியுள்ளது.
குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் குற்றால சீசன் என களைகட்டும். ஆனால் தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் போதுமான மழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இல்லாத காரணங்களால் குற்றால அருவிகளின் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த மூன்று நாட்களாக தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது