சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்படும். மேலும் குறிப்பாக தர்மபுரி, திருத்தணி,திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 42 டிகிரி செல்சியஸ் அதிகம் வெப்பம் காணப்படும். மே 7ஆம் தேதிக்குப் பின்னர் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், வேலூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்கியுள்ளதால் ஒரு வாரம் வெப்பம் அதிகமாக காணப்படும். சென்னையில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காலநிலை மாற்றம் மட்டுமே வெப்ப அலை காரணம் இல்லை என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.