தமிழகத்தில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் கிடையாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். இதை தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மாவட்ட விரைவு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது.