பால் கொள்முதலில் பிரச்சனை இல்லை என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பால் கொள்முதலில் பிரச்சனை இல்லை என்றும், வழக்கம்போல் பால் கொள்முதல் நடைபெற்றதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரு சில சங்கங்கள் தவிர இதர சங்கங்கள் வழக்கமான அளவுக்கு பால் வழங்கியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.