நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுகின்றனர் - நிர்மலா சீதாராமன் 

December 12, 2022

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைப்படுகின்றனர் என நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. இந்த கூட்டம் டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுப்ராயன், மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கடன்களை ரத்து செய்துள்ளது. ஆனால் 0.82% மட்டும் இருக்க கூடிய உயர்கல்விக்காக கடன் […]

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைப்படுகின்றனர் என நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. இந்த கூட்டம் டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுப்ராயன், மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கடன்களை ரத்து செய்துள்ளது. ஆனால் 0.82% மட்டும் இருக்க கூடிய உயர்கல்விக்காக கடன் பெற்ற ஏழை மாணவர்களின் கடனை ஏன் ரத்து செய்ய கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், பெருநிறுவனங்கள் கடனை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றார். மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை ஏதோ பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்குவது போல உள்நோக்கத்துடன் எதிர்கட்சியினர் பேசுகிறார்கள். இது முற்றிலும் தவறு. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் சிலர் பொறாமைப்படுவது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu