நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 18 வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 190 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கிடையே இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்று அதன் தேர்தல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் 94 தொகுதிகளுக்காக நடைபெற உள்ள மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறும்
மனுக்கள் மீதான பரிசீலனை இருபதாம் தேதியும், 22ஆம் தேதி மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ள கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மே 7ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.