வங்காள தேசத்தில் நடைபெறும் டி20 தொடரில் ஜிம்பாப்வே அணியை வங்காளதேச அணி மூன்றாவது டி20 யில் வெற்றி பெற்றுள்ளது.
வங்காளதேசத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது. இதனை அடுத்து முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. ஜிம்பாபே அணி 166 தன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஒன்பது ரன் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது