டெக்சாஸில், கடந்த வாரம் கல்ஃப் கோஸ்ட் கடற்கரை பகுதியில், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. இதற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய தொடங்கியுள்ளனர்.
தற்போதைய நிலையில், கடல் நீரின் வெப்பநிலையே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடல் நீரின் வெப்பநிலை 70 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டினால், மென்காதன் வகை மீன்களுக்கு போதிய அளவு பிராண வாயு கிடைப்பதில்லை. எனவே, அவை இறந்து கரை ஒதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாகவே, குளிர்ந்த நீரில் வெப்ப நீரை விட அதிக அளவு ஆக்சிஜன் இருக்கும் எனவும், கடல் நீர் வெப்பம் ஆவதால் மேலும் பல கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே, புவி வெப்பமயமாதல் குறித்து விஞ்ஞானிகள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.