கடந்த 6 மாதங்களாக, சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த 3 விண்வெளி வீரர்கள் இன்று காலை பூமி திரும்பி உள்ளனர்.
Jing Haipeng, Zhu Yangzhu மற்றும் Gui Haichao ஆகிய 3 சீன விண்வெளி வீரர்கள் டியாங்காங் விண்வெளி நிலையத்தில் 6 மாத காலமாக தங்கி இருந்து ஆய்வுப் பணிகள் மேற்கொண்டனர். இன்று காலை, சின்சுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் அவர்கள் பத்திரமாக தரையிறங்கினர். அவர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் சீனாவின் வேறு 3 விண்வெளி வீரர்கள் டியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள், அடுத்த 6 மாதங்களுக்கு விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.