மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை 22 நாட்களுக்குப் பின்னர் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் உள்நாடு மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மலை பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டதன் மூலம் கடந்த நவம்பர் 22ஆம் தேதி முதல் மழை ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் கடந்த 14ஆம் தேதி மீண்டும் 22 நாட்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கிய நிலையில் மீண்டும் 20ம் தேதி குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடர்லி - ஹில்குரோவ் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 20 முதல் நேற்று வரை மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. பின்பு இன்று வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து ஊட்டி மலை ரயில் காலை 7:10 மணிக்கு புறப்பட்டு சென்றது.