குஜராத்தில் கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தின் போர் பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஏ.எல்.ஹெச். துருவ் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், கடலோர காவல்படையைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.