மகாராஷ்டிராவில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் பலியாகினர்.
மகாராஷ்டிராவில் பெரிமிலி தாலம் என்ற பெயரில் நக்சலைட்டுகள் ஆயுதம் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள கட்சி ரோலி என்ற மாவட்டத்தில் உள்ள கட்டரங்காட்டா என்ற கிராமத்தில் நக்சலைட்டுகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கட்சிரோலி காவல் துறையின் சிறப்பு போர் பிரிவான சி-60 கமாண்டோக்களின் இரண்டு பிரிவுகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நிறுத்தப்பட்டதை அடுத்து அங்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் நக்சலைட்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் அதே இடத்தில் ஏகே 47 ரக துப்பாக்கி, கர்பைன், இன்சாஸ் துப்பாக்கி,நக்சல் புத்தகம் உள்ளிட்ட பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன