அமெரிக்க பாராளுமன்றத்தில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
சீனாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் செயலி டிக்டாக் செயலி. இதன் தலைமை நிறுவனம் பைடான்ஸ். இந்த செயலி பயனர்களின் சம்மதம் இல்லாமல் தரவுகளை முறைகேடாக பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஒரு உளவு நடவடிக்கை என சில நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இதனால் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆகையால் 2020இல் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் டிக் டாக் செயலுக்கு தடை விதித்தன. அமெரிக்காவின் சில மாநிலங்கள் இந்த செயலி க்கு தடை விதித்தனர். இருந்த போதிலும் அமெரிக்கா முழுவதும் இதனை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் பாராளுமன்றத்தில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கான மசோதா கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 352 பேர் வாக்களித்தனர். எதிர்த்து 65 பேர் வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா செனட் சபையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். பிறகு அதிபரின் கையெழுத்திற்கு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்படும். அதிபர் கையெழுத்திட்டதும் டிக் டாக் செயலி தடை செய்யப்படும். டிக் டாக் செயலி அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால் பைடான்ஸ் நிறுவனம் அதிலிருந்து வெளியேற வேண்டும். அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.