உலக அளவில் பிரபலமான புகைப்பட செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இந்த செயலிக்கு நேரடி போட்டியாக டிக் டாக் நிறுவனம் புதிய புகைப்பட செயலியை வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
டிக் டாக் நிறுவனம் எழுத்துப்பூர்வ மற்றும் புகைப்படங்கள் சார்ந்த புதிய தளத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்திருந்தது. டிக் டாக் நோட்ஸ் என்ற பெயரில் இது வெளியாகும் என கருதப்படுகிறது. இதில் புகைப்படங்களுக்காக தனிப்பட்ட பகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதற்கான வடிவமைப்பு முழுமை பெறவில்லை என டிக்டாக் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரீல்ஸ் பதிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி வந்த இன்ஸ்டாகிராம், மீண்டும் புகைப்படங்களுக்கு முன்னுரிமை வழங்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, டிக் டாக் செயலிக்கு பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட தடை காரணமாகவே, இன்ஸ்டாகிராம் செயலி அதிக பயன்பாட்டுக்கு வந்தது கவனிக்கத்தக்கது.