இந்தோனேசியா நாட்டை பொறுத்தவரை, கைபேசி செயலி மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குற்றமாகும். ஆனால், டிக் டாக் செயலி மூலம் இவ்வாறான விற்பனை நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இது இந்தோனேசியாவின் சட்டங்களை மீறுவது போல உள்ளதால், டிக் டாக் செயலி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்நாட்டின் சிறு குறு தொழில்துறை அமைச்சர் டெடன் மஸ்துகி தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவில் உள்ள உள்நாட்டு விற்பனையாளர்களின் நலனை கருதி, சமூக வலைதளங்கள் மூலம் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘டிக் டாக் ஷாப்’ என்ற இணைய வர்த்தக சேவை இந்தோனேஷியாவில் முடக்கப்பட்டது. ஆனாலும், டிக் டாக் செயலியில் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே, இந்தோனேசியா அரசு டிக் டாக் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளது.