திருப்பதி காட்பாடி இடையே செல்லும் ரயில்கள் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
ரயில் வழித்தடங்களில் வருகின்ற 15-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருப்பதியில் இருந்து காலை காட்பாடிக்கு புறப்படும் பயணிகள் ரயில் மற்றும் காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு புறப்படும் ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதைப்போல் காட்பாடியில் இருந்து காலை ஜோலார்பேட்டை செல்லும் ரயில் மற்றும் ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடிக்கு செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் காட்பாடி உடன் நிறுத்தப்படுகிறது. பின்னர் திருப்பதிக்கு பதிலாக காட்பாடியில் இருந்து புறப்பட்டு வழக்கமான அட்டவணையுடன் விழுப்புரம் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.