திருப்பதியில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ மற்றும் நவராத்திரி விழாக்களின் போது விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும். சிவாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த நாட்களில் அங்கு பக்தர்களுக்கு சிறந்த தரிசனம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் முன்னரே செய்யப்படும். மேலும் அறைகள் முன்பதிவு, அன்னபிரசாதம், லட்டுக்கள் மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும். மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்கள் கருட சேவை திருப்பதியில் நடந்து வருகிறது. இன்று நடைபெற இருந்த கருட சேவை விகானச மகாமுனி ஜெயந்தியை ஒட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவ முதல் நாள் ஏழுமலையானுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குகிறார்.