ரயில் இயக்கம் முதல் அனைத்து சேவைகளையும் கையக படுத்த தமிழக அரசு திட்டம் செய்துள்ளது.சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டங்களை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்துக் குழுமம் வணிக திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரை கோரியுள்ளது. இதில் ரயில் இயக்கம் முதல் அனைத்து சேவைகளையும் கையகப்படுத்துவது தொடர்பான வணிகத்திட்ட அறிக்கை தயாரிக்கவும், பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்றவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.