தமிழகத்தில் வணிக வரி மற்றும் பதிவுத் துறையில் நடப்பு ஆண்டில் 87 ஆயிரத்து 472 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இது குறித்து வணிக வரி மற்றும் பதிவுத் துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வணிக வரித் துறை, நடப்பு நிதியாண்டில் அக்டோபர் வரை 76 ஆயிரத்து 839 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 ஆயிரத்து 529 கோடி ரூபாய் அதிகமாகும்.
மேலும், பதிவுத் துறையில் நடப்பு நிதியாண்டில் 10 ஆயிரத்து 633 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2,785 கோடி ரூபாய் அதிகம். நடப்பு நிதியாண்டில் வணிக வரி, பதிவுத்துறை இரண்டையும் சேர்த்து 87 ஆயிரத்து 472 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.