டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் கோவை அணி வெற்றி பெற்றுள்ளது.
கோவையில் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் திருச்சி மற்றும் கோவை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீசை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து கோவை அணி களம் இறங்கியதில் சுஜய் - முகிலேஷ் ஜோடி நிதானமாக விளையாடியது. ஆட்டத்தில் முகிலேஷ் 63 ரன்களை எடுத்து அசத்தினார். மேலும் சுஜய் 48 ரன்கள் அடித்தார். எனவே கோவை அணி 16.1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் பெற்ற கோவை போட்டியில் வெற்றி பெற்றது.