இன்ஜினியரிங் மற்றும் 'குரூப் - 4' உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளின் முடிவுகள் குறித்த உத்தேச அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் உத்தேச தேதி விபரம் மாதந்தோறும் வெளியிடப்படும். அதன்படி, ஜனவரி மாத உத்தேச அட்டவணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மொத்தம் 15 போட்டி தேர்வுகளின் முடிவுகள் வெளியிடும் உத்தேச தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற இன்ஜினியரிங் பணிகளில் 830 இடங்களை நிரப்புவதற்கான தேர்வின் முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும். குரூப் - 4 பதவிகளில் 9,840 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியாகும். நில அளவையாளர் மற்றும் வரைவாளர் தேர்வுக்கு இந்த மாதமும், தலைமை செயலக உதவி பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஏப்ரலிலும் தேர்வு முடிவு வெளியிடப்படும் என அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.