புதிய டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே.பிரபாகர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும் என உறுதி அளித்துள்ளார்.
சென்னையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் புதிய டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே.பிரபாகர் பதவியேற்றார். பதவியேற்ற உடனே, அவர் கூறியதாவது: "டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் முறையாக நடத்தப்படும், முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும். மற்ற போட்டி தேர்வுகளும் ஒரே நாளில் இல்லாத வகையில் திட்டமிடப்படும். காலதாமதத்தை குறைக்க அனைத்துவிதமான நடவடிக்கையும் எடுப்போம். தரமான தேர்வுகளை மேற்கொண்டு, எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவோம்." என கூறியுள்ளார்.