தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வு ஜூலை 13-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிஎஸ்பி, துணை கலெக்டர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்கள் நிரப்ப எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.