பதிவுத்துறை காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் விரைவில் நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் பி.மூர்த்தி 

பதிவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் பதிவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட பணி சீராய்வுக் கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், பத்திரங்கள் பதியப்படும்போது பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்காதபடி, உடனுக்குடன் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் 3.0 மென்பொருளை பயன்படுத்தி குறைபாடுகளை களைய […]

பதிவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் பதிவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட பணி சீராய்வுக் கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், பத்திரங்கள் பதியப்படும்போது பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்காதபடி, உடனுக்குடன் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் 3.0 மென்பொருளை பயன்படுத்தி குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேர்மையான முறையில் பதிவு நடைபெறும் வகையிலும் இடைத்தரகர்கள் பதிவு நடைபெறும் இடத்தில் இருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பத்திரப்பதிவுத் துறையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தற்போது காலியாக உள்ள 85 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu