நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில், தமிழ்நாட்டின் நிகர கடன் 30.3% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில், தமிழ்நாட்டின் கடன் 24403 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவே கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தில், 25000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் இந்த தகவல்களை உறுதி செய்கின்றன.
மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கப்படுகிறது. செப்டம்பர் மாத இறுதியில், தமிழ்நாடு வாங்கிய கடன் 33000 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 39000 கோடியாக இருந்தது. கடன் மதிப்பு குறைந்துள்ளது, மாநிலத்தின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதை குறிப்பதாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில், தமிழ்நாட்டின் மொத்த வருவாய் 1.12 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே கடந்த வருடத்தில், 85209.74 கோடியாக பதிவாகி இருந்தது.