தமிழகத்தில் இன்று 600 சிறப்பு பஸ்கள் இயக்கம் - அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பயணிகள் சிரமமின்றி செயல்படஇன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை மற்றும் திங்களன்று சுப முகூர்த்த நாள் என்பதால் பயணிகள் வழக்கத்தை விட அதிகமாக பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்வதற்காக முக்கிய இடங்களுக்கு மட்டும் இன்று தினசரி பஸ்களுடன் கூடுதலாக 600 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் 300 பேருந்துகளுக்கும் […]

தமிழகத்தில் பயணிகள் சிரமமின்றி செயல்படஇன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சனி மற்றும் ஞாயிறு விடுமுறை மற்றும் திங்களன்று சுப முகூர்த்த நாள் என்பதால் பயணிகள் வழக்கத்தை விட அதிகமாக பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்வதற்காக முக்கிய இடங்களுக்கு மட்டும் இன்று தினசரி பஸ்களுடன் கூடுதலாக 600 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் 300 பேருந்துகளுக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கு 300 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுவரை 9,298 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் கூடுதலாக பயணம் செய்ய தமிழக போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu