தமிழக சட்டசபையில் இன்று ஒரு நாள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்றைய கூட்டத்தில் அவை கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்திக் கூறி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இன்று ஒரு நாள் அதிமுகவிற்கு சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள சபாநாயகர் தடை விதித்துள்ளார்