பாராளுமன்ற தேர்தலுக்காக கோவையில் இன்று ஆளுங்கட்சியான திமுக மற்றும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் செய்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் திமுக, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் கோவை பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியும் ஆன ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.