நெல்லை,தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்க கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வரும் 22-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் கன்னியாகுமரி,நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.