கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த 8ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை பல லட்சம் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.