மின் நுகர்வோர் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் 'ஆதார்' எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் ஆகும்.
தமிழக மின் வாரியம் இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படும் வீடுகள் உட்பட 2.67 கோடி நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைத்து வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள இம்மாதம் 28ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி இன்றுடன் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.